

பாடல் - 10
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில், முன்னம்
பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே.
பெருமானைக் கண்டால் அப்படியே விழுங்கிவிடுவேன் என்று நான் ஆர்வத்தோடு இருக்கிறேன். ஆனால் அந்தப் பெருமானோ என்னைவிட விரைவாக இதில் உறுதிகொண்டான், எனக்குமுன்பாக அவன் என்னை முழுக்கப் பருகிவிட்டான். கருத்த மேகத்தைப்போன்ற திருக்காட்கரை அப்பன் வேகமானவன்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.