

பாடல் 1
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மடநாராய், திருமுழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூந்துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும்கால்கள் என் தலைமேல் கெழுமிரோ நுமரோடே.
இரை தேடுவதற்காக எங்களுடைய கானலுக்கு வந்து அங்குள்ள கழியிலே இனிதாக அமரும் சிவந்த கால்களைக்கொண்ட இள நாரையே, திருமுழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், தேன் மிகுந்த திருத்துழாயைத் திருமுடியிலே சூடிய எங்கள் குடக்கூத்தர், அவரிடம் எனக்காக நீயும் உன் தோழர்களும் தூது செல்வீர்களா? அப்படிச் சென்று திரும்பியதும் உங்களுடைய புனிதமான அந்தக் கால்களை என் தலைமீது சேர்ப்பீர்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.