ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 10

சோலைகளால் சூழப்பட்ட
ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 10
Updated on
1 min read

பாடல் 10

அந்தோ, அணுகப்பெறு நாள் என்று, எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்,
கொந்துஆர் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணிவண்ணா.

கொத்தாக மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநாவாயிலே வந்து எழுந்தருளியிருக்கும் எங்கள் மாமணிவண்ணனே,  நான் உன்னை அடைகின்ற நாள் என்றைக்கோ என்று எப்போதும் ஏங்குவேன், மனம் கலங்கித் ‘திருமால்’ என்று உன்னை அழைப்பேன், அடடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com