ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1

மல்லிகை மணம்
ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1
Updated on
1 min read

பாடல் 1

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ,
வண் குறிஞ்சி இசை தவருமாலோ,
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ,
செக்கர் நன்மேகங்கள் சிதைக்குமாலோ,
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு, அரி ஏறு, எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியமாலோ.

மல்லிகை மணம் கமழும் தென்றல் என்னை அறுக்கிறது, இனிமையான குறிஞ்சி இசை என் காதைத் துளைக்கிறது, சூரியன் மறையும் மாலையும் என்னை மயக்குகிறது, செக்கர் வானத்தில் நல்ல மேகங்கள் என்னைச் சிதைக்கின்றன, மலர்ந்த, அழகிய தாமரைபோன்ற கண்களையுடைய எம்பெருமான், ஆயர்களின் சிங்கம், ஆண் சிங்கம், எங்கள் மாயோன், அவர் தழுவிய மார்பகங்களையும் தோளையும் வைத்துக்கொண்டு, இப்போது அவரைப் பிரிந்து வருந்துகிறேன், எனக்குப் புகலிடம் எதுவோ, நான் அறியேன், தனிமையில் வருந்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com