ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 11

எம்பெருமானை நோக்கி
ஒன்பதாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் - 11

கூவுதல், வருதல் செய்திடாய் என்று
குரைகடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதிநாடன் சடகோபன்
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான்
அடி இணை உள்ளத்து ஓர்வாரே.

சத்தமிடும் கடலைக் கடைந்த எம்பெருமானை நோக்கி, ‘நீ என்னைக் கூவி அழைத்துக்கொள்ளவேண்டும், அல்லது, இங்கே வரவேண்டும்’ என்றார் சடகோபர், நன்கு பரந்த நீர்வளம் நிறைந்த தாமிரபரணி நதி பாய்கிற திருவழுதி நாட்டைச் சேர்ந்தவர் அவர், அவ்வாறு சடகோபர் பாடிய நாவுக்குச் சிறப்பான ஆயிரம் பாடல்களிலே இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், மூன்று உலகங்களையும் அளந்த எம்பெருமானின் திருவடிகளை ஓய்வின்றி உள்ளத்திலே நினைப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com