ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 4

நறுமணம் கமழும்
ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 4
Updated on
1 min read

பாடல் - 4

அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்,
வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என் அப்பன்,
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே.

அனைத்து உலகங்களும் எம்பெருமானுக்குள் நிற்கின்றன, தானும் முறைப்படி அவற்றுக்குள் நிற்கிறான், அத்தகைய பிரான், நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் நம் அப்பன், என்னுடைய சிறிய, அரிய உயிரை உண்டானே, அவனுடைய திருவருளை என்னால் அறிந்துகொள்ளமுடியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com