ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7

உயிரை உண்டான்
ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 7
Updated on
1 min read


பாடல் - 7

காட்கரை ஏத்தும், அதனுள் கண்ணா என்னும்,
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்,
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே.

என்னை அடிமையாக்கிக்கொள்பவனைப்போல என்னுடைய உயிரை உண்டான் எம்பெருமான், ஆனால், அந்த மாயன் என்னை முழுமையாக உட்கொள்ளவில்லை, இன்னும் கொஞ்சம் உயிர் மீதி உள்ளது. அப்படி மீதமிருக்கும் என் உயிர், அப்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்காட்கரையைப் போற்றும், அங்கே எழுந்தருளியிருக்கும் கண்ணா என்று அவனைப் புகழும், ஆசை நோய் மிகுந்து, அவனை நினைந்து, கரைந்து நெகிழும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com