பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5

எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5
Updated on
1 min read

பாடல் 5

வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே.

வண்டுகள் நிறைந்த சோலைகளையுடைய தென் திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எனக்குப் பரமபதத்தைத் தருவான், அத்தகைய எம்பெருமான், என்னோடு ஒட்டினான், மாமிசமாகிய இந்த உடலினுள் புகுந்தான், அவனைப் பிரிந்து நான் தடுமாறும்படி செய்யக்கூடிய வினைகளைத் தடுத்தான். (நான் எப்போதும் அவனை நினைத்துக்கொண்டிருக்கும்படி செய்தான்.)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com