பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 10

திருவடிகளைப் பெற்றேன்
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 10
Updated on
1 min read


பாடல் 10

உற்றேன், உகந்து பணிசெய்து உன பாதம்
பெற்றேன், ஈதே இன்னம் வேண்டுவது, எந்தாய்,
கற்றார், மறைவாணர்கள் வாழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே.

எம்பெருமானே, எங்கள் தந்தையே, உன்னருகே வந்தேன், மகிழ்வோடு உனக்குத் தொண்டுகள் செய்து உன்னுடைய திருவடிகளைப் பெற்றேன், இனி நான் வேண்டுவதும் இந்த வரத்தைத்தான், கற்றறிந்தவர்கள், வேதங்களில் வல்லவர்கள் வாழுகின்ற திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் உன்னையே பற்றாகக் கொண்டு, மற்ற அனைத்து விருப்பங்களையும் விட்ட அடியவர்களைத் துன்பம் நெருங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com