பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11

தமிழ்ச் சொற்களாலே
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் 11

நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே.

நல்லோர் பலர் வாழ்கிற குருகூர்ச் சடகோபன், எம்பெருமானைப்பற்றிச் சிறந்த தமிழ்ச் சொற்களாலே ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் துன்பம் நெருங்காத, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருப்பேர் நகரைப்பற்றியவை, இந்தப் பாடல்களைச் சொல்லவல்ல தொண்டர்கள், பொன்னால் சூழப்பட்ட பரமபதத்தை ஆள்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com