

பாடல் 1
சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின,
ஆழ்கடல் அலை திரை கை எடுத்து ஆடின,
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய, என்னப்பன்,
வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.
என்னப்பன், நிலைத்த புகழைக்கொண்ட நாரணனுடைய பக்தர்களைக் கண்டு உலகமே மகிழ்ந்தது, சூழ்ந்திருக்கும் வானத்தில் அழகிய மேகங்கள் நல்வாத்தியங்களைப்போல் சத்தமிட்டன, ஆழ்கடல் அலைந்துவரும் அலைகளாகிய கைகளை எடுத்து ஆடியது, ஏழு பொழில்களும் நல்வளங்களைக் கையில் ஏந்தி அவர்களை வரவேற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.