பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 4

நல்ல நெஞ்சமே
பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 4
Updated on
1 min read


பாடல் 4

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்,
மன் அஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான்,
நல் நெஞ்சே, நம் பெருமான் நமக்கு அருள்தான் செய்வானே.

நல்ல நெஞ்சமே, எம்பெருமான் என்னுடைய நெஞ்சத்துக்குள் தங்கியிருக்கிறான், சிறந்த தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறான், (என்னைப் பாடவைப்பது அவனே. கொடிய நெஞ்சம் கொண்ட இரணியனின் மார்பைப் பிளந்த வாட்டாற்றான், இந்த உலகமே அஞ்சும்படி பாரததத்துப் பாண்டவர்களுக்காக ஆயுதம் எடுத்தவன், அத்தகைய நம்பெருமான் நமக்கு அருளே புரிவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com