பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9

திருமார்பிலே திருமகளோடு
பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9
Updated on
1 min read


பாடல் 9

திகழ்கின்ற திரு மார்வில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்வு இடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள் ஊர்தி, போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே.

திகழ்கின்ற திருமார்பிலே திருமகளோடு திகழ்கின்ற திருமால் சேரும் இடம், குளிர்ந்த திருவாட்டாறு. எல்லாரும் புகழ்கின்ற பறவையாகிய கருடனில் ஊர்கிறவன், போர் செய்யும் அரக்கர்களின் குலங்களைக் கெடுத்தவன், எம்பெருமான், சிறியவனாகிய என்னை இகழாமல் என் நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கிறான், எப்பொழுதும் பிரிவதில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com