ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

135. மன்னியூர் இறை  - பாடல் 9

திருவடியையும் திருமுடியையும் தேடி

News image
Updated On :4 ஆகஸ்ட் 2019, 6:30 pm

பாடல் 9:

    இருவர் நாடிய
    அரவன் அன்னியூர்
    பரவுவார் விண்ணுக்கு
    ஒருவர் ஆவரே

விளக்கம்:

அரவன்=பாம்பினை அணியாக அணிபவன்; விண்ணுக்கு=விண்ணவர்களுக்கு ஒருவன்=ஒப்பற்ற தலைவனாக விளங்கும் இந்திரன்;

பொழிப்புரை:

பிரமன் திருமால் ஆகிய இருவரும் திருவடியையும் திருமுடியையும் தேடி காண முடியாத வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவனும், பாம்பினைத் தனது உடலின் பல இடங்களில் கொண்டவனும், அன்னியூர் தலத்தின் இறைவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பாடுவோர், இந்திர பதவியை அடைவாரகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.