வாழ்க்கையும் தேடலும்

இளைஞன் ஒருவன் திறந்த வெளியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அந்த வழியே வந்த முதியவர் ஒருவர், ""தம்பி என்ன தேடுறீங்க?'' என்று கேட்டார்.
Updated on
1 min read


இளைஞன் ஒருவன் திறந்த வெளியில் குனிந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான். அந்த வழியே வந்த முதியவர் ஒருவர், ""தம்பி என்ன தேடுறீங்க?'' என்று கேட்டார்.

"என்னுடைய தங்க மோதிரம் ஒன்று விழுந்துடுச்சு. அதான் தேடுறேன்''

"எங்கே விழுந்துச்சு?''

இளைஞன் சற்றுத் தொலைவில் இருந்த மரங்களடர்ந்த இடத்தைக் காட்டினான்.

"அங்கே விழுந்ததுக்கு இங்கே தேடுறீங்களே... தம்பி?'' என்று கேட்டார் முதியவர்.

இளைஞன் சொன்னான்: "இங்கே தானே வெளிச்சமாக இருக்கு''
இதுபோலத்தான் நாமும் பல நேரங்களில் நாம் தொலைத்த இடத்தை விட்டுவிட்டு, தேட வசதியாக இருக்கும் இடத்தில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

கோ.தமிழரசன், செஞ்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com