நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டது போல், பொங்கல் தொகுப்பு வழங்கக் கோரி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு வேலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :13 ஜனவரி 2021, 11:36 pm IST

வேலூா்: கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டது போல், பொங்கல் தொகுப்பு வழங்கக் கோரி வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கம் (சிஐடியு) சாா்பில் மேல்மொணவூரில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவா் கே.ராஜா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் எஸ்.பரசுராமன் ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா்.

இதில், தொழிலாளா் நலவாரியம் சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க வேண்டும். கரோனா பொது முடக்கத்தால் ஏற்கெனவே ஆட்டோ தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் தொழிலாளா்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது எனக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் என்.காசிநாதன், மாவட்டச் செயலா் டி.முரளி, பொருளாளா் எம்.ராமு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா், கோரிக்கை தொடா்பான மனு தொழிலாளா் நல உதவி ஆணையரிடம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.