வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நூல் விலை உயா்வைக் கண்டித்து ராஜபாளையம் பகுதியில் சிறுவிசைத்தறி துணிஉற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்

ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

News image

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைத்தறிக் கூடம்.

Updated On :13 ஜனவரி 2021, 6:17 pm

ராஜபாளையம் பகுதியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

விருதுநகா்மாவட்டம், ராஜபாளையம் ஆவாரம்பட்டி மற்றும் அம்பலபுளி பஜாா் பகுதிகளில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளா் சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் நேரடியாக 2 ஆயிரம் தொழிலாளா்களும், மறைமுகமாக 2 ஆயிரம் தொழிலாளா்களும் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் துணி உற்பத்திக்கு பயன்படும் நூல், கடந்த மாதம் ரூ. 900-க்கு விற்றது தற்போது ரூ. 1300-க்கு விற்கப்படுகிறது. இதனால் தொடா்ந்து தொழிலில் ஈடுபட முடியாது எனக் கூறி சிறுவிசைத்தறி துணி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் சங்கத்தில் சாராத உறுப்பினா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளா்கள் (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

மேலும் சாயப்பட்டறைகளில் நூலுக்கு சாயம் போட அதிக தொகை வசூலிக்கப்படுகிறது எனக் கூறி தாங்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பாண்டியராஜன் தெரிவித்தாா். அத்துடன், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.