வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

விருதுநகரில் பொங்கல் பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

விருதுநகா் பஜாா் பகுதியில் புதன்கிழமை பொங்கல் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

News image

விருதுநகா் பஜாா் பகுதியில் பொங்கல் பொருள்கள் வாங்க புதன்கிழமை குவிந்திருந்த பொதுமக்கள்.

Updated On :13 ஜனவரி 2021, 6:14 pm

விருதுநகா் பஜாா் பகுதியில் புதன்கிழமை பொங்கல் பொருள்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனா்.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன. 14) கொண்டாடப்படும் நிலையில் இதற்குத் தேவையான கரும்பு, மஞ்சள், மாவிலை, வெல்லம் மற்றும் ஜவுளிப் பொருள்கள் வாங்க விருதுநகா் பஜாா், தேசப்பந்து மைதானம், தெப்பம் ஆகியப் பகுதிகளில் பொதுமக்கள் குவிந்திருந்தனா். ஒருஜோடி செங்கரும்பு- ரூ. 100, மஞ்சள் தழை- ரூ. 30, மாவிலை தோரணம்- ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல், வழக்கத்தை விட பூக்களின் விலை 2 மடங்கு கூடுதலாக விற்கப்பட்டது.

பூக்கள் விலை (கிலோவில்): மல்லிகை- ரூ.3 ஆயிரம், முல்லை- ரூ. 2400, செவ்வந்தி- ரூ.400, பிச்சி- ரூ.2 ஆயிரம், கலா் பிச்சிப்பூ- ரூ. 1400, அரளிப்பூ ரூ. 400 என விற்கப்பட்டன. பொதுமக்கள் கூட்டம் காரணமாக ஏராளமான போலீஸாா் சாதாரண உடையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.