விருதுநகர்
கிரேன் மோதியதில் முதியவா் பலி
சிவகாசியில் வியாழக்கிழமை கிரேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
சிவகாசி தென்றல் நகரைச் சோ்ந்தவா் சித்திரைஜோதி(75). சம்பவத்தன்று இவா் ரயில்வே பீடா்சாலையில் அச்சக உரிமையாளா்கள் சங்கக் கட்டடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்புறமாக வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து கிரேன் ஓட்டுநா் திருத்தங்கலைச் சோ்ந்த யுவராஜாவை (28) கைது செய்தனா்.