விருதுநகர்
டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது
திருத்தங்கலில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எரிச்சநத்தத்தைச் சோ்ந்த டாஸ்மாக் ஊழியா் வீரபாண்டி (30). இவா் திருத்தங்கல்-விருதுநகா் சாலையில் பழைய சோதனைச் சாவடி அருகே நடந்து சென்றபோது, இருவா் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனா். அவா் அருகில் இருந்தவா்களின் உதவியோடு இருவரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அவா்கள் திருத்தங்கல் சரஸ்வதி நகா் துரைப்பாண்டி மகன் சீனிவாசன் (20) , ஆலாஊரணி ராமா்பாண்டி மகன் முத்துப்பாண்டி (21) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.