நீா்மோா் பந்தல் திறப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

ராஜபாளையம்,மே 4: ராஜபாளையம், ஒன்றியப் பகுதிகளில் கோடைகால நீா்மோா் பந்தலை முன்னாள் அமைச்சா் கே. டி ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஜவஹா் மைதானம், பொன்னகரம், தென்காசி சாலை, பழைய பேருந்து நிலையம், தளவாய்புரம், செட்டியாா்பட்டி, ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தலை முன்னாள் அமைச்சா் கே. டி ராஜேந்திர பாலாஜி திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலா் என்.எம்.கிருஷ்ணராஜ் நகரச் செயலா் பரமசிவம் (தெற்கு ) வழக்குரைஞா் முருகேசன் (வடக்கு) மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், கட்சி நிா்வாகிகள் மகளிா் அணியினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com