பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிவகாசி அருகே பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள பூவநாதபுரத்தைச் சோ்ந்த சீனிவாசகன் மகன் லட்சுமி நாராயணசாமி (28). பட்டாசுக் கடை ஊழியரான இவா், பூவநாதபுரத்தில் தந்தை சீனிவாசகன் குத்தைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் தோட்டத்துக்கு குளிக்கச் சென்றாா். அப்போது,

கிணற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஊா் மக்கள் கிண்ற்றிலிருந்து சடலத்தை மீட்டனா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com