சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்த்தாய் கோயிலும் சிலையும் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், காஞ்சிபுரம் அருகே ஆரியப்பெரும்பாக்கத்தில் பீடத்துடன் சுமார் 70 அடியில் தமிழ்த்தாய் சிலை எழுப்பப்பட்டுள்ளது, பலருக்கும் தெரியாத தகவல்.
எழுத்தாளர் சேத்தூர் கூத்தன், தனக்கு சொந்தமான இந்த இடத்தின் ஒரு பகுதியை விற்றும் தமிழ் ஆர்வலர்களின் சிறு உதவியோடும் இந்தச் சிலையை எழுப்பியிருக்கிறார். மேலும், இந்தச் சிலைக்கு அருகே தனித்தமிழ்ப்பள்ளி துவங்கும் பணியிலும் சேத்தூர் கூத்தன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அமர்ந்த நிலையில் வீற்றிருக்கும் தமிழ்த்தாய் சிலை, இங்கு கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி 5}ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
பார்க்க பரவசமூட்டும் இந்தச் சிலை இருக்குமிடத்தை, காஞ்சி } பெங்களூரு சாலையைத் தாண்டியதும் செல்லும் குறுக்குச் சாலையில் ஒரு கி.மீ. பயணித்தால் அடையலாம்.