

தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வந்து நவரசம் காட்டிய கார்த்திக், அவருடைய "நடவடிக்கைகளால்' சினிமாவிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். கட்சி தொடங்கிய பிறகு சினிமாவிலிருந்து முழுமையாக விலகியிருந்தவரை தன்னுடைய "ராவணன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் மணிரத்னம். இதற்கிடையில் அவரைச் சந்தித்த நல விரும்பிகள் சிலர், "சினிமாவில் ஹீரோவாக நடிக்காவிட்டாலும் பரவாயில்லை; பிரபுவைப் போல கேரக்டர் ரோல்களில் நடிக்கலாமே' என நல்லதாக நான்கு வார்த்தைகளைக் கூறியுள்ளனர். அவற்றை ஏற்றுக்கொண்ட கார்த்திக், "மாஞ்சா வேலு' படத்தின் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறார். இதில் அருண்விஜய்யின் அண்ணனாக வித்தியாசமான வேடத்தில் கலக்கியிருக்கிறாராம் கார்த்திக். ""வருஷம் 16', "கோகுலத்தில் சீதை' படங்களைப் போல சுறுசுறுப்பான ரொமான்டிக் ஹீரோவாக இந்தப் படத்தில் தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியிருக்கிறார் கார்த்திக். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வந்து நடித்துக்கொடுக்கும் கார்த்திக்கின் ஆர்வத்தைப் பார்த்தாலே அவர் சினிமாவில் இன்னொரு ரவுண்டு கலக்கப்போவது புரியும்'' என புகழ்கிறார் "மாஞ்சா வேலு' படத்தின் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.