க.பி. விவேகா!

  "கந்தசாமி' படத்தின் பாடல்களும் படமும் ஹிட் ஆனதில் படத்தின் பாடலாசிரியர் விவேகா உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இலக்கு குறித்து அவரிடம் பேசியபோது... ""ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும்
க.பி. விவேகா!
Updated on
1 min read

  "கந்தசாமி' படத்தின் பாடல்களும் படமும் ஹிட் ஆனதில் படத்தின் பாடலாசிரியர் விவேகா உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இலக்கு குறித்து அவரிடம் பேசியபோது...

""ஒன்றின் மீது ஆசை வந்துவிட்டாலே அதை அடையும் திறமை வந்துவிட்டது என அர்த்தம்' என்பது வெளிநாட்டு பழமொழி. ஆசை திறமையாக மாறலாம். திறமை காட்ட வாய்ப்பு அமைய வேண்டும். வாய்ப்பு அமைய காலம் கனிய வேண்டும். காலம் கனிய வைத்த வாய்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும். அது "கந்தசாமி' படத்தின் மூலம் இப்போதுதான் எனக்கு முழுமையாக கை கூடியுள்ளது.

இந்த வெற்றிக்கு தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் சுசிகணேசன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரே முக்கியக் காரணம். ஒருவருடைய வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமுமே வார்த்தைகளாய் வெளிப்படும். எனக்கான வாசிப்பும் வாழ்க்கை அனுபவமும் முழுக்க முழுக்க என்னுடையவை. அதை யாரும் நகலெடுக்க முடியாது. யாருடைய வாழ்க்கை அனுபவத்தையும் நான் நகலெடுக்க முடியாது. எனவே என் பாதையும் பயணமும் தனியாகவே இருக்கும்.

கி.மு., கி.பி., போல என்னுடைய வாழ்க்கைப் பாதையை க.மு (கந்தசாமிக்கு முன்) க.பி (கந்தசாமிக்குப் பின்) என பிரிக்கலாம். எனக்குக் கமர்ஷியல் எழுத்தும் வரும்; கவிதை எழுத்தும் வரும். அதற்கான பயிற்சியும் அனுபவமும் எனக்கு இருக்கிறது. காலம் அமையும்போது அதை நிரூபிப்பேன்'' என்று கூறும் விவேகா, தற்போது 70 படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். அவற்றில் 15 படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com