திரைக்கதிர்: ஆதங்கப்பட்ட மோனிகா!

பெரிய அளவில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட "அழகி' மோனிகா, "சிலந்தி' வலையில் சிக்கியதால் க்ளாமர் முத்திரை குத்தப்பட்டார். வாய்ப்புகள் வரவில்லையா? எனக் கேட்டபோது... ""நான் நடித்துள்ள "வர்ணம்', "கெ
திரைக்கதிர்: ஆதங்கப்பட்ட மோனிகா!
Updated on
1 min read

பெரிய அளவில் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட "அழகி' மோனிகா, "சிலந்தி' வலையில் சிக்கியதால் க்ளாமர் முத்திரை குத்தப்பட்டார். வாய்ப்புகள் வரவில்லையா? எனக் கேட்டபோது...

""நான் நடித்துள்ள "வர்ணம்', "கெளரவர்கள்', "நஞ்சுபுரம்' போன்ற படங்களின் ரிலீசுக்காகக் காத்திருக்கிறேன். வாய்ப்புகள் வராமல் இல்லை. வரும் வாய்ப்புகள் எல்லாம் "சிலந்தி' படத்தைப் போல க்ளாமராக நடிக்கத்தான் வருகின்றன. எனவே இந்த மூன்று படங்கள் வெளியான பிறகே புதிய படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன்.

அதேபோல இனி க்ளாமராக நடிக்க மாட்டேன். ஏன் முன்னணி நடிகை ஆகவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். நான் தமிழ்ப் பெண்ணாக இல்லாமல், ஒருவேளை கேரளத்திலிருந்தோ மும்பையிலிருந்தோ வந்திருந்தால் முன்னணி நடிகையாக ஆகியிருப்பேனோ என்னவோ'' என ஆதங்கப்பட்டார் மோனிகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com