நெல்லை மாவட்டத்துக்குப் பெயர் கொடுத்த பெருமை நெல்லையப்பர் கோயிலையே சாரும். பல நூற்றாண்டு வரலாற்றையும், பெருமையையும் கொண்டுள்ள இந்தக் கோயில் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது ஆகும். பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 தேவாரத் தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்று. சைவத்துக்கு கலங்கரை விளக்காக வீற்றிருக்கும் இந்தத் தலம் சைவக் குரவர்களுள் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது.
நெல்லையப்பர் கோயில், இரண்டு மூலவர் களைக் கொண்ட " த்விமூர்த்தி' வகைக் கோயிலாகும். இங்கே மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயனக் கோலத்திலும் அருகருகே தனித்தனி சந்நிதியில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். காந்திமதி அம்பாள் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார்.
இக் கோயிலின் தலமரம் மூங்கில். 32 தீர்த்தங்களைக் கொண்ட இந்தக் கோயிலில் பொற்றாமரை, கருமாறி, வைரவ தீர்த்தம், சர்வதீர்த்தம், கம்பை, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குத்துறை ஆகிய 9 தீர்த்தங்கள் முக்கியமானவை.
பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் வேணுவனமாக (மூங்கில் காடாக) காட்சியளித்த திருநெல்வேலியில் வேதசன்மா என்ற சிவபக்தர் சிவபெருமானை வணங்கி தினமும் சுவாமிக்கு செந்நெல் அறுத்து அமுதாக்கி பூஜை செய்து வந்தார்.
இறைவனின் இந்தத் திருவிளையாடலை மெய்ப்பிக்கும் விதமாக இன்றும் கோயிலின் மூலவராக வீற்றிருக்கும் லிங்கத்தில் கோடாரி பட்ட தடம் பதிந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.