பட்டுப் புடவைகளைத் துவைத்து அலசும்போது சிறிது எலுமிச்சைச் சாறு கலந்தால் அதிகம் சாயம் போகாது, மங்காது, பார்க்க பளிச்சிடும்.
* பட்டுப்புடவைகளை இரும்பு பீரோவைவிட மர பீரோவில் வைத்தால் புதியதுபோல பல வருடங்கள் இருக்கும்.
* துண்டுகள், வேஷ்டிகள் போன்றவற்றை ஓரம் அடித்துவிட்டுப் பயன்படுத்தினால் நீண்ட நாள்களுக்கு வரும் என்பதோடு சீக்கிரம் பழசும் ஆகாது.
* புதுத் துணிகளையோ, பட்டுப் புடவைகளையோ முதல்முறை நீரில் நனைக்கும்போது ஒரு ஸ்பூன் உப்பு கலந்த நீரில் நனைத்தால் சாயம் போகாது.
* பட்டுப் புடவையில் படிந்த எண்ணெய் கறையைப் போக்க கொஞ்சம் ஷாம்பூ போட்டு அலசினால் போதும்.
* தண்ணீரில் சிறிது கிளிசரினைக் கலந்து துவைத்த பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால் அதிகம் சுருங்காமல் இழைகள் விலகாமல்
இருக்கும்.
* பட்டுப் புடவைகளைத் தண்ணீரில் நனைப்பதை விட ட்ரைவாஷ் செய்வதே நல்லது.
* நிறைய ஜரிகை உள்ள பட்டுப்புடவைகளை அடிக்கடி அதீத சூட்டில் அயர்ன் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் ஜரிகைகள் சூடு தாங்காமல் கறுத்துப் போகும் வாய்ப்பு உண்டு.
* படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், பெரிய துண்டு போன்றவற்றை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங் சோடாவும் கால் பாகம் சோப் பவுடரும் போட்டு ஊறவைத்துத் துவைத்தோமானால் துணிகள் பளிச்சென்றிருக்கும். சோப்பு செலவும் குறையும். துணிகளும் சாயம் போகாது.
* துவண்டு போயிருக்கும் பிரிண்டெட் பட்டுப் புடவைகளுக்கு புத்துயிர் ஊட்ட அரை பக்கெட் குளிர்ந்த நீரில் ஒரு டீ ஸ்பூன் சாதாரண கோந்து சேர்த்துக் கலக்கவும். துவைத்த புடவையை இந்த நீரில் அமிழ்த்தி எடுத்து உலர்த்தவும்.