சினிமா உலகைக் கற்பனை செய்து கொண்டு வாழ்ந்த என் முகவரி தெரியாத காலத்தில் 1956 -இல் நான் வரைந்த ஓவியம் ஒன்றை ஜெமினி கணேசனுக்கு அனுப்பி, அதில் கையெழுத்திட்டு அனுப்பும்படி போட்டிருந்தேன். ஓவியத்தைப் பாராட்டிக் கையெழுத்துப் போட்டு உடனே எனக்கு அனுப்பி வைத்தார். இன்றைக்கும் அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.
- நடிகர் சிவகுமார்