தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ராஜரத்தினமும் காருக்குறிச்சியும்!

அண்ணா சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் நின்றார். அனல் பறக்கும் பிரச்சாரம்.

News image
Updated On :20 பிப்ரவரி 2016, 6:22 pm IST

அண்ணா சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரத்தில் நின்றார். அனல் பறக்கும் பிரச்சாரம்.

மூதறிஞர் இராஜாஜி தலைமையில் ஒரு பொதுக் கூட்டம். சர். ஏ. இராமசாமி முதலியார் ஆங்கிலத்தில் பேச அண்ணா அதைத் தமிழில் மொழி பெயர்க்கிறார்.

கூட்டத் தலைமையேற்ற இராஜாஜி கடைசியில் பேசுகிறார். ""இது நியாயம் இல்லை. இப்படியா செய்வது?'' ஒரு பக்கம் திருவாவடுதுறை நாதசுரக் கச்சேரியும் மறுபுறம் காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதசுரக் கச்சேரியும் வைத்தால் எதை முழுமையாக ரசிக்க முடியும்? நான் மாட்டிக் கொண்டு விழிக்கிறேன்.

இராமசாமி முதலியாரின் ஆங்கில அழகையா? அண்ணாவின் தமிழ் இனிமையையா? எதை நான் ரசிக்க? திண்டாடிப் போய்விட்டேன். இவர்கள் எப்படித்தான் இப்படிப் பேசக் கற்றார்களோ?''

பாராட்டுவதைக் கூடக் கலையழகோடு பாராட்டிய ராஜாஜியின் அழகுப் பேச்சையும் கேட்ட மக்கள் மூன்று கச்சேரி கேட்ட நிறைவோடு சென்றனர்.

"சொன்னார்கள்... சொன்னார்கள்'' என்ற நூலிலிருந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.