கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாடலும் பகாடியும்!

இசையுணர்வு இதயத்தை இனிமையாக்கும்; துன்பத்தைத் துரத்திவிடும்; சோகத்தைக் கூட சுகமாக்கும். பிள்ளைகளுக்குக் குழந்தை பருவத்திலேயே தாலாட்டுப் பாடலால் இசையுணர்வைத் தாய்மார்கள் தந்தார்கள்.

News image
Updated On :13 மார்ச் 2018, 5:11 am

கவிஞர் வெங்கடேசபாரதி

இசையுணர்வு இதயத்தை இனிமையாக்கும்; துன்பத்தைத் துரத்திவிடும்; சோகத்தைக் கூட சுகமாக்கும். பிள்ளைகளுக்குக் குழந்தை பருவத்திலேயே தாலாட்டுப் பாடலால் இசையுணர்வைத் தாய்மார்கள் தந்தார்கள். இது லோலாக்கு தொங்க மேலாக்கு பறிபோன காலம்! தாலாட்டும் தமிழும் தள்ளப்பட்டு விட்டன!
இசையைப் பள்ளிப் பாடத்திட்டத்திலேயே சேர்த்துப் பயிற்றுவித்தல் வேண்டும். எல்லாரும் இசையை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். திரைப்பட இசை மேதைகள் தாங்கள் அமைத்த வர்ணமெட்டுகளால் அதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
ஒரு நல்ல பாடலைப் பாடும்போது, அப்பாடல் எந்த ராகத்தில் அமைந்தது என்று அறிந்து கொள்ளும்போது இதயம் மகிழ்கிறது; இசையறிவும் ஏற்படுகிறது.
"பகாடி' என்னும் ராகத்தைப் பார்க்கலாம். "பகாடி' வடநாட்டு ராகம் என்றாலும் நெஞ்சைத் தாலாட்டக்கூடிய நேர்த்தியானது. பழைய "பாமாவிஜயம்' திரைப்படத்துக்கு எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய இருவரும் இசையமைத்திருந்தனர். திரைப்படங்களில் வடநாட்டு ராகங்களை முதலில் அதிகம் மெட்டமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.
"பாமாவிஜய'த்தில் 

"இன்பம் பொங்கும் நன்னாளிலே
உன்தன் ஜன்ம பொன்னாளிலே
மணிவண்ணனா கண்ணா வா'

எனும் கம்பதாசன் பாடலுக்கு வெங்கட்ராமன் பகாடி ராகத்தில் மெட்டமைத்துள்ளார். 

"அழகு நிலா' என்ற படத்தில் சித்தூர் வி.நாகையா வாயசைத்து நடிக்கிறார். குட்டி பத்மினியும் குழந்தையாகி துறுதுறுவென நடக்கிறார். மெல்லிசைவாணர் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுகிறார்.

அந்தப் பாடல்:

"சின்ன சின்ன ரோஜா
சிங்கார ரோஜா
அன்னநடை நடந்து - அழகாய்
ஆடிவரும் ரோஜா'

இந்தப் பாடலுக்கு திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் பகாடி ராகத்தில் மிக அற்புதமாக மெட்டமைத்துள்ளார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பகாடி ராகத்தில் காலத்தை வெல்லும் பலவர்ண மெட்டுகளைப் போட்டுள்ளார். அதில் "கர்ணன்' திரைப்படத்தில் அமைத்த பகாடி ராக மெட்டும், கவியரசர் கண்ணதாசனின் பாடலும் சுசீலாவின் குரலும் சேர்ந்து வரும் நேரெமல்லாம் செவியில் தேன் பாய்கிறது. சிந்தையில் சுகம் தோய்கிறது, விழியில் நீரூறுகிறது.

"கண்ணுக்குக் குலமேது - கண்ணா!
கருணைக்கு இனமேது
விண்ணுக்குள் பிரிவேது - கண்ணா
விளக்குக்கு இருளேது'

எனும் பல்லவி, இரண்டாவது சரணத்தில் வரும் 

"தருபவனில்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே' 

எனும் வரிகளை சுசீலாவின் குரலில் கேட்கும்போது, நிலவூறித் ததும்பும் வழிகளும் நீரூறித் ததும்புமல்லவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.