பாசக் கயிறு

""ராகவ்... கண்ணே... இப்ப எப்படி போச்சி?''” அதற்கு குமரன்தான் பதில் சொன்னான்.      
பாசக் கயிறு


சென்ற இதழ் தொடர்ச்சி...

""ராகவ்... கண்ணே... இப்ப எப்படி போச்சி?''” அதற்கு குமரன்தான் பதில் சொன்னான்.

""கொஞ்சங்கூட நிக்கல, அப்படியேதான் இருக்கு. நானே பார்த்தேன் தண்ணி தண்ணியா அதிகமா போச்சி''

""சரி... சரி... டோண்ட் ஒர்றி. குமரன்... சீக்கிரம் இப்ப மறுபடியும் ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் குடு. சீக்கிரம்'' 

சற்று நேரம் காத்திருந்தார். இவர் பார்க்க ராகவ் ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் தண்ணியை குடித்து முடித்தான்.

""ஓகே...ஓகே..குட். ராகவ்... ஜுரம் இருக்கா சொல்லு''

ராகவ் ஈன ஸ்தாயியில், “""நேத்துல இருந்து லேசா ஜுரம் அடிக்குது டாட்''”  
""குமரா... நீ தொட்டு பார்த்து சொல்லு''

""எஸ்... லேசா இருக்கு''” 

""ஒகே...  அப்ப பேதிக்குக் காரணம் இன்ஃபெக்ஷன் தான். ஏ.ஜி.இ, பேஸில்லரி.  ஃபுட் பாய்ஸனாக கூட இருக்கலாம்''  

அடுத்த  தடவை இருவரும் டாய்லெட்டிலிருந்து வெளியே வரும்போது மாதவன் கவனித்தார்.  ராகவ் தள்ளாடுகிறான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொடகொடவென வாந்தி எடுத்தான்.

""டேய்... ராகவ்...''” - வாந்தி எடுத்துவிட்டு ஒரு நிமிடம் நின்றான். 
""ஏங்க...அவனைப் பாருங்க. ஐயோ... என்னவோ மாதிரி பார்க்கிறானே'' 
துர்கா மாதவனை உலுக்குகிறாள். அவன் கண்கள் செருக தடாரென்று கீழே விழுந்தான். அவர் பதற, துர்கா அலறினாள். 

""ராகவ்......ராகவ்...'' குமரன் சிரமப்பட்டு அவனை தூக்கி படுக்க வைத்தான்.   மாதவனுக்கு கவலை எழுந்தது. அவர் பயந்தது நேர்ந்து விட்டது. வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டான். 

கடவுளே... இந்த கண்டிஷனில் ஐ.வி. ஃப்ளூயிட்ஸ் ஏத்தாமல் எப்படி காப்பாத்தப் போகிறோம்?  அவர் பரபரத்தார்.


""குமரன்... ப்ளீஸ் சீக்கிரம் மெடிசன் பாக்ûஸ திற''

லேப் டாப்பில் காட்சிகள் விரிய எதிரில் அவன் பாக்ûஸத் திறந்தான். உள்ளே கொட்டி வைத்தாற்போல மாத்திரை அட்டைகள் கிடக்கின்றன. இதில நான் சொல்ற மருந்தை அவன் தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள.

""குமரன் கொஞ்சம் வெயிட் பண்ணு''”-எழுந்து "காக்க காக்க' சொல்லிக் கொண்டே ஓடினார். இரண்டிரண்டு படியாக தாவி  மாடியேறி உள்ளே நுழைந்து ரெண்டு நிமிஷந்தான், அதே வேகத்தில் திரும்ப இரண்டிரண்டு படிகளாக இறங்கி ஓடி வந்தார். மூச்சு இரைக்கிறது. ஆயாசமாக இருக்கிறது. வியர்த்துக் கொட்டுகிறது. இப்படி ஓடி வந்த அவருக்கு வயசு ஐம்பத்தெட்டு. போதாக் குறைக்கு வறுத்தெடுக்கும் பிரஷரும், ஷுகரும். அவர் கையில் பல்வேறு மாத்திரை அட்டைகள். 

""குமரன்... இதோ பார். என் கையில் இருப்பது சைக்ளோபாம் டேப்லெட். வயித்து வலிக்கு. அட்டையின் கலரை கவனி, பச்சை. இன்னொன்றையும் பார்த்து விடு. இது எமிùஸட் 8. மி.கி. டேப்லட். வாந்திக்கு. சீக்கிரமா ரெண்டையும் எடு''” 

பார்த்துவிட்டு ஐந்து...ஆறு நிமிஷங்கள் தேடி குமரன் சரியாக எடுத்து காட்டினான்.   

""எஸ்... இதுதாம்பா. இந்த ரெண்டிலும் ஒவ்வொரு மாத்திரையைக் குடு''
அவள் கண்ணெதிரே குமரன் கொடுக்க ராகவ் எலெக்ட்ரால் தண்ணீரில் விழுங்கினான்.

""குமரன்... அடுத்ததாக இதோ இந்த மாத்திரையைப் பாரு. சிப்ளாக்ஸ் டீ இஸட்... மாத்திரையைப் பாரு ஆரஞ்சு கலர். பார்த்துக்கிட்டியா? ஸ்பெல்லிங் பார்த்துக்க. சிப்லா கம்பெனி தயாரிப்பு''

""ம்... பார்த்துட்டேன்'' 

""அதை எடு'' அவன் ஒரு மூன்று நிமிட தேடலில் எடுத்து காட்டினான்.                                                                                                                                “""எஸ்... இதுதான் குட். இன்னும் பத்து நிமிஷம் கழிச்சி அதில ஒரு மாத்திரையைப் போட்டு எலெக்ட்ரால் தண்ணிய குடிக்க வைக்கணும்''

ஆயிற்று. சிப்ளாக்ஸ்-டீ இஸட்  மாத்திரையையும் சாப்பிட்டு  முடிச்சாச்சி. மேலும் ஒரு கிளாஸ் எலெக்ட்ரால் இறங்கியது. அத்துடன் அமைதியாக அரை மணி நேரம் காத்திருந்தார்கள். நடுவில்  டாய்லெட் போகிறானா? என்று கவனித்துக் கொண்டிருந்தார். இல்லை. அடுத்த ஸ்டெப்பை சொல்ல ஆரம்பித்தார். 

""குமரன்''

""அங்கிள்''

""இப்ப ரெண்டு டம்ளர் எலெக்ட்ரால் கொடு.'' 

அவர்கள் பார்வையில் குமரன் அவ்வப்போது எலெக்ட்ரால் தண்ணீரை கொடுத்துக் கொண்டிருந்தான். குமரன் இடையில் ராகவ் எடுத்த வாந்தியை துடைத்தெடுத்து விட்டுக் கழுவினான். மதியம் இரண்டு மணியளவில்  ராகவ் கொஞ்சம் தெளிவாகியிருந்தான். இப்போது அவனை பார்த்து  துர்கா உணர்ச்சி வசப்பட்டாள்.

"ராகவ்... இப்ப வயித்து வலி இருக்கா?''

""இருக்கு டாட். ஆனா முன்ன மாதிரி இல்ல, வயிற்றிரைச்சல் கூட குறைஞ்சிருக்கு டாட். பேதி இல்லை''

""வாந்தி வர்ற ஃபீலிங்?'' 

""எல்லாமே குறைஞ்சிருக்கு''

எலெக்ட்ரால் தண்ணீர் உள்ளுக்கு போகப் போக இப்போது இன்னும் தெளிவாகப் பேசினான். ""அவ்வளவுதான் இனிமேல் பயமில்லை. குமரன்... ரொம்ப தேங்ஸ் கண்ணா. நாம ஜெயிச்சிட்டோம். நல்லவேளை ராகவ்க்கு ஒரு மாத்திரையிலேயே வாந்தி கண்ட்ரோலுக்கு வந்திடுச்சி. சென்னையில இருந்து அமெரிக்காவுக்கு இப்படி கூட வைத்தியம் செய்ய முடியும்னு சொன்னா யாரும் நம்பக் கூட மட்டாங்க. நான் இங்கிருந்து சொல்றதை நீ அப்படியே செஞ்சி என் பிள்ளையை உயிரோடு மீட்டு எங்க கிட்ட கொடுத்துட்டப்பா. அவன் வாந்தியை கூட வாரி சுத்தம் பண்ணியே. உனக்கு நாங்க என்ன செஞ்சி இந்த கடனை தீர்க்கப் போறோம்? மறக்க மாட்டேன் தம்பீ. இந்த நிமிஷம் எங்க ராகவ்வுக்கு எல்லாமே நீதாம்பா''” சொல்லிவிட்டு  ஸ்க்ரீனில் கண்ணீருடன் அவனைக் கும்பிட்டார், கூடவே துர்காவும் கும்பிட்டாள். 

""அங்கிள்... ஆண்ட்டி... ப்ளீஸ்'' குமரன் கையால் மறுத்தான்.

""ராகவ்'' 

""டாட்'' ”--ஸ்கிரீனில் தெரியும் அப்பாவையும், அழும் அம்மாவையும் பார்த்து சிரிக்க முயன்றான்.

""இதுவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லிட்டர் எலெக்ட்ரால் தண்ணீர் உள்ளே போயிருக்கு. அமைதியாக தூங்குடா. ரெண்டு மணி நேரங் கழிச்சி கூப்பிட்றோம். ஓகே?''

ஸ்கைப்பை அணைத்தார். 

""பேஷண்ட்டுங்களை பார்த்துப் பார்த்து பார்த்து உங்களுக்கு கல் மனசுங்க. கண்ணெதிரில் ராகவ் துவண்டு போய் தொபீர் தொபீர்னு கீழே விழுறான். என்னால அழுகையை அடக்க முடியல. ஆனா நீங்க?  திட மனசு'' ”என்றாள் துர்கா.

""நான் அழலேன்னு உனக்குத் தெரியுமா? சரி அழுது இன்னா சாதிக்கப் போற, இல்லே சாதிச்ச? சொல்லு. பையன் என்ன நிலைமையில் கிடக்கிறான்? நம்முடைய முதல் குறி பிள்ளையைக் காப்பாத்தறதில இருக்கணுமேயொழிய இப்படி அழறதில இல்லை. இப்படி அழறதால நீஅவனுடைய தைரியத்தைத்தான் உடைக்கிற'' 

""இன்னைக்கு சரியான நேரத்துக்கு  நீங்க வரலேன்னா அவன் கதி என்னாயிருக்கும்?''“சொல்லும் போதே மறுபடியும் அழுதாள்.

""இதுபோல சிச்சுவேஷன் யாருக்கும் வரக் கூடாது. வந்திடுச்சி, என்ன பண்றது? சமாளிக்கணும். இப்படி பேசிப் பேசி நம்ம துக்கத்தை நாமே தூண்டி தூண்டி அழறதில அர்த்தமிருக்கா துர்கா? ஏர்போர்ட்ல போய் பாரு. எவ்வளவு பிள்ளைங்க? அதில பெரும்பாலும் யு.எஸ். போறவங்கதான். இன்னைக்கு இளைஞர்களின் கனவு அமெரிக்கா. டாலர் சம்பாத்தியத்துக்கு ஓடுறாங்க. நல்லா சம்பாதிக்கறாங்க. உலகம் சுருங்கி போச்சு துர்கா.  இந்த சூழலுக்கு நம்மளை நாம தயார் படுத்திக்கணுமே ஒழிய, முகாரி பாடிட்டிருக்கக் கூடாது. நம்ம பிள்ளைங்க சொந்தக் கால்ல நின்னு அசலூர்ல போய் ஆனை பிடிக்கிறாங்கம்மா. நமக்கு அது பெருமைதானே? உள்ளூரிலேயே இருந்து வேலை கிடைக்காம நம்ம கையை எதிர்பார்த்து நம்ம காலையே சுத்திக்கிட்டு கிடக்கிறது நமக்குப் பெருமையா என்ன? சொல்லு. அடுத்த வருஷம் பாரு, எல்லாருக்கும் இவன் தண்ணி காட்டுவான்''”

அப்போது ராகவ்விடமிருந்து கால் வந்தது. ஸ்கைப்பை ஆன் பண்ணினார்கள். ஸ்க்ரீனில் சற்று தெளிவாக ராகவ் சிரித்தான். பக்கத்தில் குமரன் உட்கார்ந்திருந்தான்.

""டாட்... மம்மீ......சரியாயிடுச்சி. இப்ப எனக்கு ஒண்ணுமில்லேம்மா''

""மறுபடியும் பேதி போ''றியா?''

""நோ டாட். இரைச்சல், வலி, வாந்தி, எதுவுமே இல்லை. ஆக்சுவலா இப்பத்தான் பசியெடுக்கிற மாதிரி இருக்கு''

""அ..ப்..ப்..பா... பெரிய ரிலீஃப். ஆயில் இல்லாத இலகுவாக செரிக்கும் உணவை சாப்பிடு. அங்கே என்ன கிடைக்கும்?''

""இந்த ப்ளாக்கிலேயே மெஸ் இருக்கு அங்கிள். சவுத் இண்டியன் டிஷ்ஷஸ் கிடைக்கும். எந்நேரமும் சூடா இட்லி சாம்பார், தோசை கிடைக்கும்''”என்றான் 
குமரன்.

""தட் ஈஸ் ஃபைன். இட்லி சாப்பிடட்டும்''

""ராகவ்... நீ சாப்பிட்ட மூன்று மாத்திரைகளையும் தினசரி ரெண்டு வேளை, மூணு  நாட்களுக்கு சாப்பிட்டு முடிக்கணும். புரியுதாடா?''

""ஓகே டாட்''”  அவர் எழுந்து  கொண்டார்.

""வெரி சாரி டாட். என் தப்புதான். நேத்து நிறைய கேக் சாப்பிட்டு விட்டேன். அதுதான்''

""மூடனே... நீ பண்ண பெரிய தப்பு எது தெரியுமா? நீ எலெக்ட்ராலை கலக்கி குடிக்காதது. அதைவிட பெரிய தப்பு கிட்ல பேதிக்கான மருந்துகளை விளக்கங்களோடு வெச்சிருந்தும் நேரத்துக்கு எடுத்து பயன்படுத்தாதது. இதைப் பத்தி குறைஞ்சது பத்து தடவை உங்கிட்ட சொல்லியனுப்பினேன். வெளிநாட்டில் நிராதரவா இருக்கிறப்போ  நீ எவ்வளவு அலர்ட்டா இருக்கணும்? ஹும்''துர்கா பையனைப் பார்த்து கலங்கினாள்.

""மம்மீ... ப்ளீஸ் அழாதே. இனிமே நான் ஜாக்கிரதையாக இருப்பேன். ப்ராமிஸ்''
மாதவன் பொரிந்து தள்ளினார்.

""ஃபூல்.. படித்த முட்டாள். நான் உனக்கு எதுவும் அட்வைஸ் சொல்லப் போறதில்லை. உன் சூழல் அறிஞ்சி நடந்துக்கோ. பிரச்னை வர்றப்ப அழறது கோழைத்தனம். எப்படி அதிலிருந்து ஜெயித்து வெளியே வர்றதுன்னுதான் நீ யோசிக்கணும். அப்படி யோசிச்சி யோசிச்சுத்தான் இன்னைக்கு உலகம் பூராவும் நம்ம தமிழாளுங்க வெற்றி பெற்ற மனுஷங்களா வாழறாங்க.

குமரனுக்கு தேங்ஸ் சொல்லு. அவன் இல்லேன்னா இப்ப என்கூட  இப்படி பேசிக்கிட்டிருக்க முடியாது. ரெண்டு பேருக்குமே சொல்றேன். உங்க கிட்ட மெடிகல் இன்ஷூரன்ஸ் கவரேஜ் இல்லாத பட்சத்தில் வெளியில் சாப்பிடறப்போ பழங்களைத் தவிர, மத்ததை தொட பத்து முறை யோசிக்கணும். ஓகே டேக் கேர். அப்புறம் பேசலாம்''”

தொடர்பு துண்டிக்கப் பட்டது.  

அப்படியே சோபாவில் ஒரு மாதிரி இறுக்கத்தோடு சரிந்தார். நெற்றியை அழுத்தி விட்டுக் கொண்டார். துர்கா கவனித்து விட்டாள். காலையிலிருந்து இவ்வளவு நேரம் அனுபவித்த மென்ட்டல் ஸ்ட்ரெஸ், டென்ஷன். பி.பி. நோயாளியான அவருக்கு ஆகாது. வந்து பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவாக அவர் தோள் பற்றி மேலே சாய்த்துக் கொண்டாள். மிருதுவாக அவர் கழுத்தின் பின்புறத்தை நீவி விட்டாள். அவ்வளவுதான் மடை உடைந்து போய், விசும்பலாக வெளிப்பட, மாலை மாலையாக கண்ணீர் வடிகிறது. அப்போது தனம் கூடுதலாக சர்க்கரை போட்ட காபியை இரண்டு பேருக்கும் கொண்டு வந்து வைத்தாள். மதியமாகி விட்டது. காலையிலிருந்து ரெண்டு பேரும் ஒண்ணுமே சாப்பிடவில்லை. இரண்டு பேருமே சர்க்கரை நோயாளிகள்.

அங்கே லாஸ் ஏஞ்சல்ஸில் குமரன் ராகவ்வை பார்த்து சிரிக்கிறான்.

""எ.ப்.ப்.பா... உங்கப்பா டெரர்டா சாமி. என்னா கேப்டன்ஷிப்? என்னா அதிகாரம்? என்னா கமாண்டிங் பவர்?, ஓட்டம், பரபரப்பு, எப்பா... கடைசியில எனக்கு தேங்ஸ் சொல்றப்போதான்டா அழுதார். அது கூட அளவாக'' ”

""எங்க டாடிய உனக்குத் தெரியாது குமரன்''”சொல்லும்போதே அவனுக்கு கண்ணீர்  கொப்பளித்துக் கொள்கிறது. 

""நான் பயந்திடுவேன்னுதான் அவர் எதையும் வெளிகாட்டல. அவருடைய டென்ஷனை மறைக்கிறதுக்குத்தான் என்னை திட்டிக்கிட்டே இருந்தார். ஊர்ல இப்ப அழுதுக்கிட்டு இருப்பாரு. எங்க மம்மி சமாதானம் சொல்லிக்கிட்டிருப்பாங்க''” சொல்லும்போதே ராகவ் அழுகிறான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com