சிரி... சிரி...
By DIN | Published On : 22nd September 2019 05:08 PM | Last Updated : 22nd September 2019 05:08 PM | அ+அ அ- |

• கணவன்: வேலைக்காரி கூட ஏன் சண்டை போடுறே?
மனைவி: அவ வேலைக்கு வந்த போதே, என்னை
உன் மாமியார் மாதிரி நினைச்சுக்கோம்மான்னு
சொல்லியிருக்கா!
- கு.அருணாசலம், தென்காசி.
• "எப்படி பாஸ் உங்க பல் உடைஞ்சது?''
"என் மனைவி சுட்ட முறுக்கைச் சாப்பிட்டேன்''
"வேணாம்னு சொல்லியிருக்கலாம்ல?''
"எதுக்கு அத்தனை பல்லும் உடையவா?''
- ஆர். அஞ்சனாதேவி, மாத்தூர்.
• "டவுன் பஸ் பின்னாடி ஓடி வந்தேன். ஏழு ரூபாய் மிச்சம்''
"ஆட்டோ பின்னாடி ஓடி வந்தா 60 ரூபாய் மிச்சமாகி
இருக்குமே''
• "தூக்கத்திலே நடக்குற வியாதிக்கு மருந்து தந்தேனே...
ஏதாவது மாற்றம் தெரியுதா?''
"தெரியுது டாக்டர்... இப்போது நடக்கும்போது தூக்கம்
வருது டாக்டர்''
-டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
* "ஏங்க இந்த வீட்டில ஒண்ணு
நான் இருக்கணும். இல்லை
உங்க அம்மா இருக்கணும்''
"நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க... வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்''
டி.மோகனதாஸ், நாகர்கோவில்.
* "ஆடி தள்ளுபடியிலே நிறைய
ஜவுளி வாங்கிட்டீயே...
உன் கணவர் என்ன செய்வார்?''
"ஆடிப் போயிடுவார்''
-ம.வேதவள்ளி. பொரவச்சேரி.
* "என்ன தலைவர் தப்புக் கணக்கு எழுதி மாட்டிக்கிட்டாரா?''
"ஆமாம்... திறந்த வெளி
அரங்கத்துக்கு செட் போடன்னு பெரிய தொகை எழுதியிருக்காரு''
எஸ்.மோகன், கோவில்பட்டி.
* "உங்க படத்துக்கு ஏன் "எங்கேயோ கேட்ட கதை'ன்னு டைட்டில்
வச்சிருக்கீங்க?''
"எல்லாம் ஒரு தற்காப்புக்குத்தான்''
- பி.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G