இங்கிலாந்தில் வேர்க்கடலை சாப்பிடும் 3 லட்சம் பேர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு என்ன செய்வது? என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் உருப்படியான ஆராய்ச்சிப் பணியில் அமெரிக்காவில் உள்ள சிலெம்சன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் பிளான்ட் - ஃபிரீடிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி - அதாவது தாவரங்களின் மரபணுக்களில் மாற்றம் செய்து - புதியவகையான வேர்க்கடலை ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்தவேர்க்கடலையைச் சாப்பிடுபவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுவதில்லை. அப்படியே ஒவ்வாமை ஏற்பட்டாலும் அதைக் குறைக்கக் கூடிய திறன் பெற்றதாக இந்த வேர்க்கடலை இருக்கிறது.