""இன்னைக்கு எங்க ஆபீஸ் மேனேஜர் என்னை பாராட்டி தள்ளிட்டார்''
"" என்னன்னு?''
""ஆபீஸ்ல எப்பவும் தூங்கிக்கிட்டு இருக்கும் போதே இவ்வளவு வேலை
பார்த்திருக்கியே, இன்னும் தூங்காம இருந்தா எவ்வளவு வேலை பார்த்திருப்பேன்னுதான்''
மு. மதிவாணன்,
அரூர்.
""நேத்து நீங்க ஏன் தூக்க மாத்திரையைச் சாப்பிடலை ?''
""தூங்கிட்டேன் டாக்டர் .''
-தீபிகா சாரதி,
சென்னை -5.
ஒருவர்: கல்யாணமான புதுத் தம்பதியர் என்னென்ன கத்துக்கிறாங்க?
மற்றவர்:புருஷன் சமையல் பண்ணக்கத்துக்கிறான்.
பொண்டாட்டி சண்டை போடக்கத்துக்கிறா.
நளினி சுந்தர்,
சென்னை .