கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிட்ஸ்

பிற பத்திரிகைகளில்  வரும்   முக்கியமான  செய்திகளைத்  தொகுத்து  வெளியிடும்  "கத்திரி விகடன்'  என்னும்  பத்திரிகையைத் தொடங்கி அதற்கான  விளம்பரத்தை வெளியிட  ஆனந்த விகடன்  பத்திரிகைக்கு அனுப்பினார் அவர்.

News image
Updated On :20 மார்ச் 2022, 12:30 am

DIN

பிற பத்திரிகைகளில்  வரும்   முக்கியமான  செய்திகளைத்  தொகுத்து  வெளியிடும்  "கத்திரி விகடன்'  என்னும்  பத்திரிகையைத் தொடங்கி அதற்கான  விளம்பரத்தை வெளியிட  ஆனந்த விகடன்  பத்திரிகைக்கு அனுப்பினார் அவர்.

உடனே  அவருக்கு  அங்கிருந்து  அழைப்பு வந்தது. விளம்பரத்துக்காக அவர் அனுப்பிய  பணத்தையும்  திருப்பிக் கொடுத்து  அவரை  உதவி  ஆசிரியராகப்  பணியில்  சேருமாறு  கேட்டனர்.

அவர்தான்  சாவி!

-------------------------------------------

Story image

கிருபானந்த வாரியார்  12 வயதிலேயே பதினான்காயிரம்  பண்களை மனப்பாடம்  செய்திருக்கிறார்.  "திருப்புகழ் அமிர்தம்'  என்னும் மாத இதழை  37  ஆண்டுகள்  நடத்தியிருக்கிறார். தியாகராஜ பாகவதர் நடித்த  "சிவகவி'  படத்திற்கு  வசனம்  எழுதி இருக்கிறார்.

-------------------------------------------

Story image

காலஞ்சென்ற  பிரபல  திரைப்பட  பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜா  "பக்கயிண்டி அம்மாயி'  என்ற  தெலுங்குப் படத்தில்  முக்கியமான  வேடத்தில்  நடித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்குப்  பிறகு  அதே   பெயரில்  அந்தப் படம்  மீண்டும்  எடுக்கப்பட்டபோது  அதில்  பின்னணிப்  பாடகர்  எஸ்.பி.  பாலசுப்பிரமணியம் அதே  வேடத்தில்  நடித்திருந்தார்.

-------------------------------------------

Story image

பாட்டி பேத்திக்கு  கதை சொல்வது  வழக்கம்.  ஆனால்   உலகப் புகழ்பெற்ற  துப்பறியும்  நாவலாசிரியை அகதா கிறிஸ்டி  தன் பாட்டிக்கு  எட்டு வயதிலேயே  மர்மக் கதைகள்  சொல்லி  திடுக்கிட  வைப்பாராம்.

- வி.ந.ஸ்ரீதரன், சிறுசேரி.

-------------------------------------------

Story image

ஆஸ்கர்  ஒயில்ட்  ஒருமுறை தாம்  எழுதிய  "நவீனம்'   ஒன்றை  அச்சிடுமாறு  அச்சகம்  ஒன்றிற்கு அனுப்பி  வைத்தார்.

சிலநாள்களில் நவீனத்தின்  கையெழுத்து  பிரதி  அவருக்கே  திரும்பி வந்தது.

ஆச்சரியத்துடனும் ஆத்திரத்துடனும் பார்சலைப் பிரித்துப் பார்த்தார்  ஒயில்ட்.  அந்த கடிதத்தில், "உங்கள்  கையெழுத்துப் பிரதியில், கால்புள்ளி,  அரைப்புள்ளி,  முக்கால் புள்ளி,  முழுப்புள்ளி,  கேள்விக் குறி,  ஒன்றையுமே  காணோம், தயவு செய்து  அவற்றைப்  போட்டனுப்பி வையுங்கள்' என்று எழுதியிருந்தது.

உடனே  ஆஸ்கர் ஒய்ல்டு  ஒரு வெள்ளைத்தாளை  எடுத்து  அதில்  நிறைய எல்லா வகையான  குறிகளையும் போட்டு அதன்  கீழே,  "நீங்கள்  விரும்புகிறார்  போல்   இவற்றைப் பகிர்ந்து  போட்டுக் கொள்ளுங்கள்'  என்று  எழுதியனுப்பினார்.
"படியுங்கள்  சுவையுங்கள்' நூலிலிருந்து)

 - ஜே.மகரூப், 
குலசேகரன் பட்டினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.