ஏன் சிரிக்கின்றாய்..?
By மயிலை மாதவன் | Published On : 26th June 2022 06:00 AM | Last Updated : 26th June 2022 06:00 AM | அ+அ அ- |

புகழ் பெற்ற பிரெஞ்சு புதின ஆசிரியர் பால் சாக் வீட்டுக்குள் ஓர் இரவு திருடன் நுழைந்துவிட்டான். அவரது மேஜையை துழாவிக் கொண்டிருந்தபோது, பால் சாக் அதை பார்த்து விட்டார். அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
""ஏன் சிரிக்கிறாய்?'' என மிரட்டினான் திருடன்.
""பகலில் நான் தேடியும் கிடைக்காத பணம் இரவில் நீ கண்டுபிடித்து விடலாம் என எண்ணி இவ்வளவு சிரமப்படுகிறாயே..? இதை எண்ணிப் பார்த்தேன். சிரித்துவிட்டேன்'' என மீண்டும் சிரித்தார் பால் சாக். இதைக் கேட்டு திருடனும் சிரித்துவிட்டான்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...