சிரி... சிரி...
"இப்பல்லாம் ஆபிஸில் பழைய மாதிரி தூங்க முடியலை''
"என்னாச்சுங்க?''
"மேனேஜர் அவர் வேலையெல்லாம் என்கிட்ட தள்ளிட்டு, தூங்கப் போயிடுறார்!''
- ப.சோமசுந்தரம்,
சென்னை-129.
"தும்பைப் பூ மாதிரி இட்லி இருக்குமுன்னு சொன்னே. பழுப்பா இருக்கு?''
"காலையில் வெள்ளையாக இருக்கிற பூ, சாயந்திரம் பழுத்து போகுதுல்ல..''
-கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.
"என்ன மாமி. ஊறுகாய் பாட்டிலில் ஊறுகாய் இல்லையே?''
"மருமகளே பாட்டிலை பார்த்துகிட்டே சாப்பிடுவோம்''
"மாமி. நாங்களெல்லாம் ஊறுகாயை நினைத்துகொண்டே சாப்பிடுவோம்''
-எஸ்.முத்தம்மாள்,
திருவிடைமருதூர்.
"என்னடா.. இன்டர்வியூக்கு போனியே என்னாச்சு.''
"வேலைக்கு சேர்ந்தால் முதல் மாசம் ரூ.5 ஆயிரம்.
அப்புறம் ஆறாவது மாசம் ரூ.10 ஆயிரம் தர்றதா சொன்னாங்க. ஆறு மாசம் கழித்தே வேலைக்கு வர்றேன்னு சொல்லிட்டேன்''
-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
"அவர் எனக்கு தூரத்துச் சொந்தம்.''
"உத்தேசமாக எவ்வளவு கிலோ மீட்டர் இருக்கும்.''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
"வக்கீலை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சுடீ''
" என்ன ஆச்சு..''
"சாப்பாடு சரியில்லை. துணி சரியா துவைக்கலைஎன்னா ஒவ்வொரு பிரிவா சொல்லி வழக்கு போடுவேன்னு சொல்றாருடீ''
-வண்ணை கணேசன்,
சென்னை.
"உங்க வீட்டு அழுக்குத் துணிகளை எடுத்துட்டுப் போறாரே.. அவர் சலவைத் தொழிலாளியா?''
"இல்லை. அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட போற கவுன்சிலர் வேட்பாளர்.''
-கு.அருணாசலம்,
தென்காசி.
"உங்க வீட்டு பெட்ரூமில் திருடன் வர்ற வரைக்கும் என்ன பண்ணேடீ''
"திருடன் அசப்புல என் வீட்டுக்காரு மாதிரி இருந்தாரு..''
"அந்த ஆளு எனக்கு கால் தூசுக்கு சமம்.''
" அப்புறம் ஏன் அவரை பார்த்து பயப்படறீங்க..''
"எனக்கு டஸ்ட் அலர்ஜி இருக்கே?''
"மருமகளே.. மூச்சு விட எனக்கு கஷ்டமா இருக்கு!''
"கஷ்டப்பட்டு உங்களை யார் விடச் சொன்னா?''
"உனக்குதான் கை, கால் நல்லா இருக்கே! ஏன் பிச்சை எடுக்கறே?''
"எனக்கு மனைவி சரியில்லை சாமி.''
"எங்க வீட்டு நாய் ரொம்ப புத்திசாலி.''
"'எப்படி சொல்றீங்க மச்சான்!''
"என் சம்பளத்தன்னிக்கு மட்டும் என்னை பார்த்து வாலாட்டும்!''
-தீபிகா சாரதி,
சென்னை.