நூறு ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத கணிதப் புதிருக்குத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளி மாணவி திவ்யா தியாகி. இவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுகலை படித்து வருகிறார். 1928-இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஹெர்மன் கிளாவர்ட் உருவாக்கிய சிக்கலான கணிதப் புதிருக்கு திவ்யா தியாகி தீர்வைக் கண்டுபிடித்துள்ளார்.
கிளாவர்ட்டின் கண்டுபிடிப்பின் அடிப்படையில் காற்றாலையின் தொழில்நுட்பம், செயல்திறன் மேம்பட்டிருந்தாலும், காற்றாலையின் எடை கூடிய சுற்றும் கைகள் நாளடைவில் எப்படி வளைகின்றன என்பது புதிராக இருந்து வந்தது.
காற்றாலைகளில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட எடை கூடிய பிளேடுகள் காற்றில் சுற்றும்போது, நல்ல எடையுடன் போதுமான பருமனுடன் இருந்தாலும் நாளடைவில் வளைந்துபோகின்றன. அதனால் காற்றாலையை செயல்திறன் குறைகிறது. பிளேடுகள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்தால், அந்த பிரமாண்ட பிளேடுகள் நாளடைவில் வளைந்து போவதைத் தவிர்க்கலாம் என்று திவ்யா தியாகியின் கண்டுபிடித்ததுடன் பிளேடுகளின் வடிவத்தை மாற்றி அமைக்கும் தொழில்நுட்பத்தையும் வகுத்தார்.
திவ்யாவின் புதிய வடிவமைப்பு காலத்தின் தேவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பால், காற்றாலையின் செயல் திறன் மேம்படும். அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். காற்றாலையை பராமரிக்கும் செலவு குறையும்.
திவ்யாவின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக 'அந்தோணி இ. வோல்க்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. திவ்யா அமெரிக்க கடற்படையின் ஹெலிகாப்டர் விமானத்தின் சுழலும் பிளேடுகளை மாற்றி வடிவமைப்பதிலும் ஆய்வு செய்து வருகிறார்.
திவ்யாவுக்கு ஆய்வில் வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ஸ்வென் ஷ்மிட்ஸ் கூறுகையில், 'திவ்யாவின் புதிய கண்டுபிடிப்பு உலக அளவில் அடுத்த தலைமுறை காற்றாலை உருவாக்கப்படுவதில் பெரிதும் உதவும்' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சைனஸுக்கு இதுதான் தீர்வு!

வாக்களித்தால் மட்டும் போதுமா?

மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!
தீர்வு கிட்டுமா, மோதல் முற்றுமா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



