பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ராஜாதி ராஜா!

'ஷேர் ஏ பஞ்சாப்' (பஞ்சாப்பின் சிங்கம்) என்ற பெயரைப் பெற்ற மகாராஜா ரஞ்சித் சிங், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆட்சி செய்தார்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 8:30 pm IST

முனைவர் ஜி.குமார்

'ஷேர் ஏ பஞ்சாப்' (பஞ்சாப்பின் சிங்கம்) என்ற பெயரைப் பெற்ற மகாராஜா ரஞ்சித் சிங், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டின் வடமேற்குப் பகுதியை ஆட்சி செய்தார். சீக்கிய மதத்தின் முதல் அரசரான இவர், 'நாட்டின் மதச்சார்பற்ற அரசர்' என்று அழைக்கப்படுகிறார்.

இவர் தனது ஆட்சியின்போது, அமிர்தசரஸில் 'ஹர்மிந்தர் சாஹிப்' என அழைக்கப்பட்ட சீக்கியர்களின் புனித ஆலயத்தை தங்கத்தால் வேய்ந்து பொற்கோயிலாக மாற்றினார். அதே அளவிலான தங்கத்தை வாரணாசி விசுவநாதர் கோயிலுக்கும், லாகூர் சுனேரி என்ற பழமையான மசூதிக்கும் அளித்தார்.

இவரது அரசவையில் சீக்கியர்களைத் தவிர, ஹிந்துக்களும் முகமதியர்களும் அங்கம் வகித்தனர். ஐரோப்பியர்களுக்கும் பதவிகளை வழங்கியிருந்தார். மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் ராணிகளாக இருந்துள்ளனர்.

1780-ஆம் ஆண்டு நவம்பர்13-இல் அன்றைய பஞ்சாப் பிரதேசத்தின் குஜ்ரன்வாலா என்ற இடத்தில் பிறந்தவர் ரஞ்சித் சிங். இவரது இயற்பெயர் புத் சிங். இளம் வயதில் பெரியம்மை நோய் பீடித்ததால், அவரின் இடது கண் பார்வை மங்கியது. மேலும், முகத்தில் தழும்புகளும் உண்டாயின.

ஒளரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் முகலாய அரசு சரியத் தொடங்கியது. அன்றைய பஞ்சாப் பிரதேசத்தை சீக்கியர்களின் சில பிரிவுகள் தத்தம் வசம் எடுத்துக் கொண்டனர். அவற்றில் ஒரு பிரிவின் சிற்றரசராக இருந்து சில பகுதிகளை நிர்வகித்து வந்தவர் மகா சிங். அவரது மகன்தான் புத் சிங். பின்னாளில் இவர், பீர் முகம்மது என்பவரின் படைகளை எதிர்த்து வெற்றி கண்டார். 'ரஞ்சித்' என்பதற்கு 'வெற்றி' என்பது பொருள். அதைக் கொண்டாடும் விதமாக, மகாசிங் தனது மகன் 'புத் சிங்' பெயரை 'ரஞ்சித் சிங்' என்று மாற்றி விடுகிறார்.

ரஞ்சித் சிங்கின் 12-ஆம் வயதில் மகாசிங் மறைவுற்றார். இளம்வயதிலேயே ரஞ்சித் சிங் தனது பிராந்தியத்தை ஆளும் பொறுப்பை ஏற்கிறார்.

1798 முதல் 1800 வரை நடைபெற்ற பல போர்களில் ரஞ்சித் சிங் அனைத்து சீக்கியர்களை ஒன்றிணைத்ததுடன், ஆப்கானிஸ்தானியர்களையும், முகலாயப் படைகளையும் எதிர்த்து வெற்றி காண்கிறார்.

1801-இல் தனது 21-ஆவது வயதில் ரஞ்சித் சிங் தன்னை முழு பஞ்சாப் - ஜம்மு பிராந்தியத்தின் மகாராஜாவாக அறிவித்துக் கொள்கிறார். லாகூர் தலைநகராகிறது. அவர் மகாராஜாவாக முடிசூடியபோது கோயில்கள், மசூதிகள், குருத்துவாராக்கள் என அனைத்திலும் பிரார்த்தனை செய்யப்பட்டன. இவர் பசுவதையைத் தடுத்ததோடு, வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு

களையும் அறவே ஒழித்தார். ஆங்கிலேயருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருந்த இவரது ஆட்சிக் காலம் 1839-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி வரை இருந்தது.

சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் நினைவாக, பட்னா சாஹிப், ஹசூர் சாஹிப் என இரண்டு குருத்வாராக்களை நிறுவினார். இவர் பெற்ற செல்வங்களில் கோஹினூர் வைரமும் ஒன்றாகும்.

2022-ஆம் ஆண்டில் அவரது சிலை இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது. அமிர்தசரசில் ராம் பாக் அரன்மணையில் அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.