மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ் குறும்படத்துக்கு அனுபம் கெர் பாராட்டு!

அண்மையில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில், இ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி நடித்த 'ஆநிரை' என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:35 pm

டெல்டா அசோக்

அண்மையில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில், இ.வி.கணேஷ் பாபு எழுதி இயக்கி நடித்த 'ஆநிரை' என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

கதையின் நாயகனாக, சிங்கப்பூரில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் அர்ஜுனன் மாரியப்பன் நடித்துள்ளார். மீரா, அஞ்சனா தமிழ்ச்செல்வி, காமாட்சி சுந்தரம், கெளரி சங்கர், இரா.செழியன் நடித்துள்ள இந்தக் குறும்படத்துக்கு பி.செல்லதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, பன்னீர்செல்வம் படத் தொகுப்பு செய்திருக்கிறார். இந்த குறும்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுபம் கெர், இசையமைப்பாளர் கீரவணி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து இ.வி.கணேஷ் பாபு கூறியதாவது, 'ஆநிரை குறும்படத்தைப் பார்த்த அனுபம் கெர், 'பணம்தான் பெரிது என்று நினைக்கும் இந்த உலகில், அன்பே பெரிது' என்று படம் காட்டுகிறது' என்று பாராட்டினார்.

'பசுத்தோலில் செய்யப்பட்ட இசைக்கருவி மீது முகத்தை வைத்து, அதை பசு மாடாகவே நினைத்து அர்ஜுனன் மாரியப்பன் கதறும் காட்சி உருக வைத்தது. இனி நான் தோல் இசைக் கருவியை வாசிக்க முடியுமா என்று தெரியவில்லை' என்று, ஆஸ்கர் விருது பெற்ற இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி நெகிழ்ந்தார்.

'இப்படிப் படத்தைப் பார்த்த பலருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வை இந்தப் படம் தந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் காணும் விதமாக இதோடு இன்னும் இரு குறும்படங்களை இணைத்து ஆந்தாலஜி பாணியில் திரைக்குக் கொண்டு வர முயற்சியில் இறங்கியிருக்கிறேன்' என்றார் கணேஷ்பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.