தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

கர்நாடகத்தின் முக்கிய சரணாலயங்கள்

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட கங்காவதி அருகேயுள்ள பங்கப்பூர் ஓநாய் சரணாலயத்தின் முக்கிய பகுதியின் ஆழத்தில் ஒரு சிறப்புத் தொட்டில் உள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2025, 12:01 am IST

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட கங்காவதி அருகேயுள்ள பங்கப்பூர் ஓநாய் சரணாலயத்தின் முக்கிய பகுதியின் ஆழத்தில் ஒரு சிறப்புத் தொட்டில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலையின் உச்சியில் உள்ள குகையில் டிசம்பரில் ஒரு பெண் ஓநாய் எட்டு குட்டிகளை ஈன்று வருகிறது. இது அழிந்து வரும் அபூர்வ இனங்களில் ஒன்று.

2021-ஆம் ஆண்டில் குகையை சுற்றுள்ள பகுதி சரணாலயமாக மாற்றப்பட்டவுடன் சுமார் 340 ஏக்கர் பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்டது. இந்தப் பகுதி உலர் புதர், புல்வெளிகள் கொண்ட பகுதியாகும். இதனால் 3-4 இந்திய சாம்பல் ஓநாய்களின் மகப்பேறு இருப்பிடமாக உள்ளது.

கொப்பல் தக்காண பீட பூமியில் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஓரத்தில் அமைந்துள்ள பகுதி. இங்கு பாறை மலைகள், புல்வெளிகள், ஆற்றங்கரை நிலங்கள், புதர்கள், பசுமையான நிலங்கள் உள்ளதுடன் குகைகளுக்கும் பஞ்சமில்லை.

இதனால் ஓநாய்களுடன் சில குகைகளில் சிறுத்தைகள், சாம்பல் கரடிகள், கோடிட்ட ஹைனா , தங்க வண்ண நரிகள், வழுவழுப்பான பூசப்பட்டநீர்நாய்கள், முள்ளம்பன்றிகள், பாங்கோலின்கள் போன்ற பல விலங்குகள் வாழ்கின்றன.

பங்காபூர் சரணாலயத்தைத் தவிர்த்து, ஹிரேசுலகெரே கரடி பாதுகாப்பு காப்பகம் மற்றும் துங்கபத்ரா நீர் நாய் பாதுகாப்பகம் ஆகியவையும் இந்த பகுதியில் உள்ளன. பொதுவாகவே விலங்குகள் மற்றும் பறவை இனங்கள் அதிகம். இவற்றுக்கு அண்மையில் எழுந்துள்ள பெரும் சவால் கல்குவாரிகள்தான்.

கொப்பலையைப் பொருத்தவரை மற்றொரு சிறப்பு விஷயம் இதனை 'ஜெயின் காசி' என அழைப்பர். இங்கு எழுநூற்றுக்கும் அதிகமான சமண மடங்கள், கோயில்கள் உள்ளன. இங்கு துங்கபத்ரா நதி ஓடுவதால் விலங்கினங்கள் நிம்மதியாய் வாழ்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.