கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

ரோடேமாக் பாழடைந்த கட்டடங்கள்...

லக்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ரோடேமாக் என்ற பாழடைந்த கிராமம் உள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2025, 12:15 am IST

லக்சம்பர்க் நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் ரோடேமாக் என்ற பாழடைந்த கிராமம் உள்ளது. இங்கு 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை, தேவாலயம், பல கட்டடங்கள் உள்ளன. இவை இன்று கைவிடப்பட்ட நினைவுச் சின்னங்களாக மாறிவிட்டன. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக மதில் சுவர் கட்டி அழகான நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டது. இந்தப் பகுதி ஒரு இடைக்காலப் பொறியியலுக்குச் சான்றாக உள்ளது.

பண்டைய பிரபுக்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் வளைந்த கூரைகளுடன் கூடிய மறுமலர்ச்சி கால பாதாள அறைகள் உள்ளன. 22 மீட்டர் ஆழமுள்ள கிணறு கூட உள்ளது.

ரோடேமாக்கின் கோட்டை கோபுரங்களுக்கு கீழே நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் உள்ளது. மருத்துவ மூலிகைகள், உண்ணக் கூடிய தாவரங்கள்,காய்கறிகள், அலங்காரப் பூக்கள் என அனைத்தும் இன்றும் பொலிவுடன் உள்ளன. ஜூன் மாதத்தில் லாவென்டர், கெமோமில் பூக்கள் அற்புத நறுமனத்தை கோட்டைக்குள் எங்கும் பரப்புகின்றன.

கார்கோசோன் ஒரு பிரம்மாண்ட பழைய நினைவுச் சின்னப் பகுதியாகும், ரோடாமேக்கை 'சின்ன கார்கோசோன்' என அழைக்கின்றனர். இந்தக் கோட்டையும் நினைவுச் சின்னங்களும் மே முதல் செப்டம்பர் வரை மட்டுமே திறந்திருக்கும். அப்போது வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில், அவர்களுக்கு 12-ஆம் நூற்றாண்டின் நாகரிகத்தைப் பிரதி

பலிக்கும் ஆடைகளை அணிவித்து, நிகழ்ச்சிகளையும் நடனங்களையும் நடத்துகின்றனர்.இந்த இடத்திலிருந்து 21 கி.மீட்டரில் ஜெர்மன் எல்லை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.