
'ஒரு பன் விலை எவ்ளோங்க..'
'எட்டு ரூபாய்... '
'பீட்சா விலை...'
'75 ரூபாய் இருக்கும்...'
'கொஞ்சுண்டு முட்டைக்கோஸ், வெங்காயம் எவ்ளோ...'
'பத்து ரூபாய்ங்க..?'
'நீங்களே சொல்லுங்க.. ஒரு பர்கர் ஏன் நூறு ரூபாய்க்கு விற்கிறீங்க.. அநியாயம்தானே..'
அ.சுஹைல்ரஹ்மான், திருச்சி.
'கல்யாணப் பொண்ணுக்கிட்டே தனியா பேசினீயே..? என்ன சொன்னா?'
'கல்யாணத்துக்குப் பிறகு விதவிதமாகச் சமைச்சு தருவியான்னு சொன்னா?'
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
'அமைச்சரே... பதுங்கு குழிகளை காண யார் வந்துள்ளார்கள்...?'
'போர் இல்லாத நேரத்தில் மாம்பழம், பலாப்பழங்களைப் பழுக்க வைக்க வாடகைக்கு விட சொல்லி காய் விற்பனையாளர் வந்தார். வாடகைக்கு விட்டு விட்டேன்.. மன்னா..?'
ரமா ராமசுவாமி, அய்யம்பேட்டை.
'சாப்பிட்ட பில்லில் ஐம்பத்தைந்து ரூபாய்தான் போட்டிருக்கு.. பாக்கி ஐந்து ரூபாய் கேட்டா முறைக்கறீங்க?'
'உங்களுக்கு 'பார்' பக்கம் போற பழக்கம் இல்லைப் போல.. சரி இந்தாங்க?'
ரத்னம் மரகதம், கோவை.
'பொங்கலுக்கும் தீபாவளிக்கும் பெரிய ஒற்றுமை இருக்கு?'
'என்ன அது..?'
'தீபாவளிக்கு முறுக்கு தீராது. பொங்கலுக்கோ பொங்கலே தீராது...?'
கி.சரஸ்வதி, ஈரோடு.
'என்னடா ரொம்ப யோசனையா இருக்கே..?'
'என் பெண்டாட்டி ஏதாவது சமையல் பண்ணி வச்சு.. இது என்னன்னு கண்டுபிடிக்கச் சொல்லி விளையாடறா?'
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'பதுங்குக் குழியிலிருந்த மன்னர் எதிரிகிட்ட எப்படி மாட்டினார்...?'
'மகாராணி மிக்ஸியை அங்கேயே கொண்டு போய் ஜூஸ் போட்டிருக்காங்க.. சத்தம் கேட்டு கண்டுபிடிச்சிட்டான்..'
அ.ரியாஸ், சேலம்.
'மருமகளே.. ரசத்தைக் கொஞ்சம் பெருக்கணும்மா..?'
'கொட்டிட்டிங்களா அத்தே...'
வி.ரேவதி, தஞ்சாவூர்.
'இவ்ளோ பேப்பர் ரோஸ்ட் சுட்டு வைச்சிருக்கீங்களே.. விக்கலைன்னா என்ன பண்ணுவீங்க?'
'ஹோட்டலை மூடுறதுக்கு முன்னாடி போன் போடுவோம்.. பழைய பேப்பர்காரர் வந்து எடைக்கு எடுத்துட்டு போயிடுவார்...'
ஈனோஸ் இப்ராஹீம், சென்னை.
'பெட் காபி கொடு..'
'எதுக்கு பெட்காபி..'
'நான் இன்னும் தூங்கப் போறேன்..'
'சாப்பாடு செலவு பிள்ளை வீட்டுதா?. பெண் வீட்டுதா?'
'மொய் எழுதும் நம்முடையது...'
'கோயிலில் பொங்கல் பிரசாதம் வாங்கினேன்...?'
'அப்ப ஏன் ஓட்டலுக்கு வேற போறே..?'
'சட்னி, சாம்பார் வாங்கப் போறேன்..'
பர்வதவர்த்தினி, பம்மல்.