கல்யாண மண்டபத்துல அறிவிப்புப் பலகை வைச்சிருக்காங்களே.. என்ன இருக்கு அதில்..?'
'மொய் எழுதுவதற்குப் பணம் இல்லாவிட்டாலும், ஜி.பே. பண்ணலாமாம்...'
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
'எதுக்குடி என் விரலில் எலுமிச்சைப் பழத்தைச் சொருகுறே..?'
'எந்த நேரமும் மொபைல் போனில் கை வைக்காமல் இருக்க...!'
-பர்வதவர்த்தினி, பம்மல்.
'செல்போனை கொடுத்த உடனே என் குழந்தை அழுகையை நிறுத்தியது..?'
'அது சரி... உன் கணவர் எதுக்கு அழுறாரு...?'
'அவரோட செல்போனை பிடிங்கி கொடுத்தேன்.. அதுக்குதான்...'
-வி.சாரதி டேச்சு, சென்னை.
'செவன் த்ரீ ஃபோர் நைன்னு சொல்லிட்டே ரோடில் போறீங்க.. எதுக்கு...?'
'பின் நம்பரை மறந்துட்டா ஏ.டி.எம். மிஷினில் இருந்து பணம் வராதே. அதுக்குதான்...'
'இதென்ன அமைச்சரே.. வினோதமான உபகரணமாக இருக்கே...?'
'இதற்கு பெயர் செல்போன் மன்னா... டைம் மிஷினில் 2025-க்கு பயணித்து அங்கிருந்து வாங்கி வந்தேன்...'
-அ.ரியாஸ், சேலம்.
'செல்போன் கேட்டா எங்க அப்பா, அம்மா ரொம்ப யோசிக்கிறாங்கடீ...'
'நீ தலைகுனியக் கூடாதுன்னு நினைக்கிறாங்களோ... என்னவோ...?'
'மீட்டர் சரியாக ஓடலைன்னு 'மீட்டர்களின் ராஜா'ன்னு சொல்லி ஒரு மீட்டரை இ.பி. ஆபிஸ்காரங்க எடுத்து வந்து வைச்சிருக்காங்க..?'
'அது ஒழுங்கா ஓர்க் ஆகுதுல்ல...'
'ராஜா மாதிரியே ஒரே ஓட்டமா ஓடுது சார்...'
-வி.ரேவதி, தஞ்சாவூர்.
'அரசர் போர் களத்துக்கு போகாமலேயே எப்படி ஜெயித்தார்...'
'ஏ.ஐ. உதவியால்தான்...'
-மஞ்சுதேவன், பெங்களூரு.
'என் கணவர் ஆபிஸ் போகும்போது, டி.வி. ரிமோட்டை எடுத்துட்டு போயிட்டார்...?'
'போன் பண்ண வேண்டியதுதானே...'
'அவர் போன் என்று நினைத்து டி.வி. ரிமோட்டை கொண்டு போயிட்டார்...'
'ஏன்டா சந்தோஷமாய் இருக்கே... பின் ஏன் சோகமா ஸ்டேட்டஸ் வைச்சிருக்கே...?'
'சொந்தக்காரங்க சந்தோஷமாய் இருக்கட்டும்தான்...'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.