பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

வெற்றி அரங்கு வெம்பக்கோட்டை!

'அறிவும், வளமும்' என்ற தலைப்பிலான 4-ஆவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நவ. 14-இல் தொடங்கியது. நவ. 24-இல் நிறைவடைகிறது.

Published On :

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்தும் 'அறிவும், வளமும்' என்ற தலைப்பிலான 4-ஆவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நவ. 14-இல் தொடங்கியது. நவ. 24-இல் நிறைவடைகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் தமிழ்நாடு அரசு சார்பில் 3 அரங்குகள் உள்ளன. முதலாவதாக உள்ள வெம்பக்கோட்டை அகழாய்வு தொல்பொருள்கள் கண்காட்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இரும்புக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், நுண்கற்காலக் கருவிகள், கண்ணாடி மணிகள், சுடுமண்ணாலான காதணிகள், உருவங்கள், தக்களிகள், மணிகள், சங்கு வளையல்கள், மோதிரங்கள், வட்டச் சில்லுகள், இரும்பு உருக்குக் கழிவுகள், யானைத் தந்தத்திலான பதக்கங்கள், சுடுமண்ணாலான பகடைக்காய், திமில் காளைகள், வண்ணம் தீட்டப்பட்ட வளையல்கள், பவளம், செவந்திக்கல் மணிகள், சுடுமண் பதக்கங்கள், ஆட்டக் காய்கள், தங்க அணிகலன், மனித - விலங்குகளின் உருவங்கள், சிறிய தங்கத் தகடு, சுடுமண்ணாலான அறிய வகை தாய் தெய்வ வழிபாட்டு உருவங்கள், பவள மோதிரக்கல், செப்புக் காசுகள், செப்புப் பொருள்கள், சுடுமண் உருவங்கள், கல்பந்துகள், எடைக்கல், முத்திரைகள் போன்ற பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

2024-இல் அகழாய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. அதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்று தெரிவித்தார். இதில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் (விஜயகரிசல்குளம்) மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஜூன் மாதம் தொடங்கப்பட்டு மே மாதம் நிறைவடைந்திருந்தன. இதற்காக 24 பள்ளங்கள் தோண்டப்பட்டு சுமார் 5,010 தொல்பொருள்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

-பொ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.