மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புல்லட் பாபா...

உலகில் வாகனத்துக்காக ஒரு கோயில் கட்டப்பட்டது என்றால், அது இந்தியாவில்தான்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 6:31 pm

எஸ்.சபேஷ்

உலகில் வாகனத்துக்காக ஒரு கோயில் கட்டப்பட்டது என்றால், அது இந்தியாவில்தான். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் பாலி நகருக்கு அருகேயுள்ள சோட்டிலா கிராமத்தில்தான் 'ராயல் என்

ஃபீல்ட் புல்லட்'டை கடவுளாக வழிபடும் கோயில் உள்ளது. கிராம மக்களின் இறைசார் நம்பிக்கையால் அமைந்துள்ள இந்த கோயிலை 'ஓம் பன்னா தாம்', 'புல்லட் பாபா கோயில்' என்றெல்லாம் அழைக்கின்றனர். இங்கு புல்லட்டுக்கு வழிபாடு நடைபெறுகிறது.

1988 ஆம் ஆண்டில் ஓம்சிங் ரத்தோட் என்பவர் புல்லட்டில் சென்றபோது, சாலை விபத்தில் இறந்து விட்டார். விசாரணைக்காக புல்லட்டை போலீஸார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். சம்பவம் நடைபெற்ற இரண்டாவது நாளில், புல்லட் காணாமல் போனது. காவல் துறையினர் புல்லட்டை தேடியபோது, அது ஓம்சிங் இறந்த இடத்தில் நின்றதைக் கண்டறிந்தனர்.

பின்னர், மீண்டும் காவல் நிலையத்திற்கு புல்லட் கொண்டு செல்லப்பட்டது. மறுநாளும் புல்லட் காணாமல் போனது. அதை தேடியபோது, அது மீண்டும் ஓம்சிங் நினைவிடத்துக்கு வந்திருந்தது.

இது தொடர்கதையாக ஒருநாள் புல்லட்டை இரவில் போலீஸார் கண்காணித்தனர். புல்லட் தானாகவே கிளம்பி விபத்து நடந்த இடத்துக்குச் சென்றதை போலீஸார் கவனித்தனர். இந்த அமானுஷ்ய சம்பவத்தைப் பார்த்த காவல் துறையினர் புல்லட்டை ஓம் சிங் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு உள்ளூரில் பரவ, கிராம மக்கள் புல்லட்டுக்கு மலர் தூவி தீபம் ஏற்றி வழிபட ஆரம்பித்தனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கவே ஓம் சிங் ரத்தோரின் தந்தை தாக்கூர் ஜோக்சிங் ரத்தோரும் 'ஓம் பன்னா தாம்' கோயிலைக் கட்டினார்.

கோயிலுக்கு வருவோர் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வணங்கி மலர் மாலைகளை அணிவித்து, தேங்காய், இனிப்புகள் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தங்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், தங்கள் பாதுகாப்புக்காகவும் கோயிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்து விட்டுச் செல்கின்றனர்.

புதிதாக வாகனங்களை வாங்குவோர் இங்கு வைத்து பூஜை செய்துவிட்டுச் செல்கின்றனர். தற்போது ஓம்சிங் ரத்தோரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 'பயணத்தை பாதுகாப்பானதாகவும், சிரமமில்லாததாகவும் புல்லட் பாபா மாற்றுவார்' என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.