

ஏறி நின்று எடை பார்க்கும் இயந்திரம் புதியதாக வந்தபோது, தலைநகர் தில்லியில் பல தலைவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது எடையைப் பார்த்தனர். ஜவாஹர்லால் நேரு எடை பார்த்தவுடன், தனது எடையைப் பார்க்காமலேயே காமராஜர் வெறுமனே நின்றிருந்தார்.
'காமராஜர் ஏன் எடை பார்க்க மறுக்கிறார்' என்ற வினா எழுந்தபோது, நேரு சிரித்தபடியே, 'எடை பார்க்கும் இயந்திரத்தில் செலுத்த ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அதுகூட அவரது சட்டைப் பையில் இல்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.