அரியாணாவைச் சேர்ந்த பதினெட்டு வயதான ஜிதின் ராவ் என்ற இளைஞர் ரூ. 500 கோடி சம்பாதித்து, இந்திய வர்த்தக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இவர் தனது பதின்மூன்று வயதிலேயே பங்குச் சந்தை, வர்த்தகம் குறித்த அறிவைப் பெருக்கிக் கொண்டுள்ளார். 12- ஆம் வகுப்பில் படிக்கும் போது இந்த அனுபவம் கை கொடுத்துள்ளது.
பங்குச் சந்தையில் விரிவான ஆராய்ச்சி, வலுவான அடிப்படை அறிவு, அனுபவம் இவற்றுடன் தனக்கென்று வர்த்தகப் பாணியை வகுத்துக் கொண்டுள்ள ஜிதினை, வர்த்தக வட்டாரங்களில் 'எஸ்.ஜே.2' என்று அழைக்கின்றனர்.
இவர் தனது யூடியூப் சேனலில், வர்த்தக நுட்பங்கள், குறிப்புகள் குறித்த காணொளிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
பங்குச் சந்தையில், முந்தைய தலைமுறைகளை விட இன்றைய இளைய தலைமுறை அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிதினின் வெற்றி... இளையதலைமுறையை பங்குச் சந்தையின் பக்கம் ஈர்த்தது வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.