6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அந்த ஆறு ஆண்டுகள்!

உலக நாடுகளால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டின் ரகசியம் ஒன்று இருக்கிறது.

News image
Updated On :13 செப்டம்பர் 2025, 6:42 pm

சிவ.ராஜ்குமார்

உலக நாடுகளால் 'பெரியண்ணன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க நாட்டின் ரகசியம் ஒன்று இருக்கிறது. 1783-இல் அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது. ஆனால், ஜார்ஜ் வாஷிங்டன் 1789 ஏப்ரல் 30-இல்தான் அதிபராகப் பதவியேற்றார். இடைப்பட்ட ஆறு ஆண்டுகள் குறித்து சரித்திர ஆவணங்களிலோ, வெள்ளை மாளிகையிலோ, மற்ற எதிலும் இடம்பெறவில்லை. நடந்தது என்ன?

சுதந்திரம் அடைந்தவுடன் அதிபராக பதவியேற்க மனம் இல்லாத ஜார்ஜ் வாஷிங்டன், தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதனால் அமெரிக்க காங்கிரஸ் கூடி விவாதித்து, சுதந்திரத்துக்காகப் போராடிய ஜான் ஹான்ஸன் என்பவரை அதிபராகத் தேர்வு செய்தது.

இவருக்கு சட்ட அறிவு, நிர்வாகத் திறன் இல்லாததால் நிதித் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட்டு, உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டது. ராணுவ வீரர்களுக்கே ஊதியம் அளிக்க முடியாத மோசமான நிலையும் ஏற்பட்டதால், அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் இலியாஸ் பவுடினாட், தாமஸ் மிஃப்லின், ரிச்சர்ட் ஹென்றி, நாதன்கோர்மென், ஆர்தர் க்ளேர், க்ரிஃபின் என ஆண்டுக்கு ஒருவர் அடுத்தடுத்து அதிபர்களாயினர். ஆனால், இவர்களாலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தைச் சீராக்க முடியவில்லை.

நிலைமை மோசமாகியதால், அமெரிக்க காங்கிரஸ் கூடி விவாதித்தது. ஜார்ஜ் வாஷிங்டனை அதிபராக்கியது. அதுதான் அமெரிக்க வரலாற்றின் தொடக்கமாகக் கணக்கிடப்பட்டது. அவரது சீரிய நிர்வாகத்தால் பொருளாதார நிலைமையும் கட்டுக்குள் வந்தது.

அந்த ஆறு ஆண்டுகள் நாட்டு நடப்புகள் கரும்புள்ளியாக இருந்ததால், சரித்திரத்தில் இருந்து அழிக்கப்பட்டது. இதை அவர்கள் யாரும் பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் அதை உறுதி செய்ய ஆதாரம் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.